Close
செப்டம்பர் 20, 2024 5:30 காலை

குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப்பள்ளியில்   விளையாட்டு விழா

புதுக்கோட்டை

குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப்பள்ளியில் நடந்த விளையாட்டு விழா

புதுக்கோட்டை   குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற   விளையாட்டு விழாவில்  அசத்திய   மாணவ மாணவிகள்.

புதுக்கோட்டை  குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு விழாவுக்கு  பள்ளியின் ஆலோசகர் நீலாவதி ராஜ்மோகன்  தலைமை  வகித்தார். பள்ளி தாளாளர் டி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்து   அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தாயினிப்பட்டி ஊராட்சி மன்ற  தலைவர் ரவிக்குமார்  பங்கேற்று   விளையாட்டு போட்டியை ஒலிம்பிக் தீபம் ஏற்றி  தொடங்கி வைத்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மகிழ்ச்சியுடன் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது  திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

புதுக்கோட்டை
மகாத்மா பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்

இதில் யோகா, ஓட்டப் பந்தயம்,  சாக்குஓட்டம்,பிரமிடு,  சிலம்பாட் டம் உள்ளிட்ட .விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகள்  மாணவ மாணவி யர்கள்  மற்றும் பெற்றோர்களை அரசு சிறப்பு  வழக்கறிஞர் எம். செந்தில்குமார் வாழ்த்தி  பேசினார்.

ஆசிரியைகள், சுஹாசினி, சத்யா, ரம்யா,சண்முகப்பிரியா புவனேஸ் வரி, கோவர்த்தினி சுபத்திரை, கேசகவள்ளி   யோகபாண்டியன்  மற்றும்   மாணவ, மாணவிகள். பெற்றோர்கள் உள்ளிட்டோர்   கலந்து  கொண்டனர். விழா  ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top