Close
செப்டம்பர் 20, 2024 5:41 காலை

வீட்டு மனை பட்டா அரசின் வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை: முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை

புதுகையில் நடந்த தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயற்குழு கூட்டம்

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மத்திய மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அறிவொளி இயக்க கட்டிடத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்க செயற்குழு கூட்டம்  மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மத்திய மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டம் அடுக்குமாடி குடியிருப்புகளில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

புதுக்கோட்டை
செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மருத்துவ சமூக மக்களுக்கு மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பு நிலைகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைமை நிர்வாகிகள், மாநில துணை நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top