Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

கொரோனாவால் பெற்றோரை இழந்த 18 வயதுக்குள்பட்டோர் நிவாரண நிதி பெற கடைசி வாய்ப்பு

புதுக்கோட்டை

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்கள் நிவாரணநிதி பெற விண்ணப்பிகலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 18 வயதுக்குட்பட்டவர்கள் அரசு நிவாரண நிதி பெற  வரும் 22 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க  கடைசி  வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்ட கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்த 18 வயதுக்குட்பட்டவர்கள் அரசு  வழங்கும் மறு வாழ்வு நிதி ஒரு குழந்தைக்கு ரூ. 3 லட்சம் வீதம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த  18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு  தமிழக அரசு வழங்கும் நிவாரண நிதி உதவித்தொகை ரூ.3 லட்சத்தை  பெற்றிட இது நாள் வரை விண்ணப்பிக்காத நபர்கள் உரிய ஆவணங்களுடன்  கடைசி வாய்ப்பாக வருகிற  22.2.2023-ஆம் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, முன்னாள் படை வீரர் நல அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் முதல் வீதி,  திருக்கோகர்ணம்  அஞ்சல், புதுக்கோட்டை 622002 -என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்கள் அறிய 6369031924  மற்றும் (04322-221266)  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top