Close
செப்டம்பர் 20, 2024 5:50 காலை

கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல்

புதுக்கோட்டை

புதுகை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வளாக நேர்காணல்

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது .

நிகழ்வுக்கு கல்லூரியின் செயலாளர் பி.கருப்பையா தலைமை  வகித்தார்.  பொருளாளர் ஆர்.எம்.வீ.கதிரேசன் முன்னிலை வகித்தார்.  முதல்வர் ஜீவானந்தம், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள அலுவலர்கள் திருமலைமதன், மெய்யப்பன் ஆகியோர்  வளாக நேர்காணலை நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்தனர்.

வளாக நேர்காணலில் தேர்வு  பெற்ற  மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் 150 -க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.முன்னதாக ஒருங்கிணைப்பாளர் திருமலையரசன் அனைவரையும் வரவேற்றார்.இணை ஒருங்கிணைப்பாளர் பிரபுதாசன் நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top