Close
செப்டம்பர் 20, 2024 4:13 காலை

மேலகொத்தமங்கலம்- சேந்தங்குடி பகுதிகளில்  காய்ச்சல் பரிசோதனை சிறப்பு  மருத்துவ முகாம்

புதுக்கோட்டை

மேலகொத்தமங்கலத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், மேலகொத்தமங்கலம்- சேந்தங்குடி பகுதிகளில்  காய்ச்சல் பரிசோதனை சிறப்பு  மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவரங்குளம் நடமாடும் மருத்துவமனை மற்றும் கொத்த மங்கலம்,  வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து    மேலகொத்தமங்கலம்  இ -சேவை மைய கட்டிடம்  மற்றும்  சேந்தங்குடிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  காய்ச்சல்   பரிசோதனை  சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவரங்குளம் நடமாடும் மருத்துவமனை மருத்துவ அலுவலர் எம். கோபாலகிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்ற இம்முகாம் களில் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள்,  பெரியவர்களுக்கு டெங்கு, மலேரியா, டைபாய்டு, கொரோனா தொடர்பாக சுமார் 50 பேருக்கு     மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில்   ஊராட்சி மன்ற தலைவர் செல்வநாயகம், செவிலியர் எழிலரசி, வாகன ஓட்டுனர் கதிரவன், ஆய்வக நுட்புனர் தமிழ்ச்செல்வி, வாகன மற்றும் மருத்துவமனை உதவியாளர் முருகேசன்.
திருவரங்குளம் நடமாடும் மருத்துவமனை,  கொத்தமங்கலம் மற்றும் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இடைநிலை சுகாதார செவிலியர் கவிநயா.
சுகாதார தன்னார்வலர்கள் திவ்யா, சுதா, சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி, திருச்செல்வம், மணிகண்டன், கொசுப்புழு  ஒழிப்பு பணியாளர்கள் புஷ்பலதா, தாமோதரன், லட்சுமண குமார், கோவிந்தராஜ், குணசேகரன் உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top