Close
செப்டம்பர் 20, 2024 3:57 காலை

புதுக்கோட்டையில் தமிழ் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி டிஆர்ஓ -செல்வி தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகிலிருந்து, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வாரம் குறித்து நேற்று நடந்த விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி   கொடியசைத்து துவக்கி வைத்து, தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய அரசு அலுவலர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கினார்.

தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 27.12.1956 -ஆம் நாளினை நினைவு கூறும் வகையில், ஆட்சி மொழிச் சட்ட வாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 01.03.2023 முதல் 08.03.2023 வரை கொண்டாடப் படுகிறது.

இந்த விழிப்புணர்வு பேரணியில், அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பினர், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 400 -க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று, ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்”, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”, ‘அன்னைத் தமிழே ஆட்சி மொழி”,

‘தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறை தோறும் துடித்தெழுந்தே”, ‘தமிழில் கையொப்பமிடுவோம் தமிழர் நாம் என்று பாடுவோம்”, ‘விழிபோலெண்ணி நம் தமிழ் காக்க வேண்டும்”, ‘அமுத தமிழில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டி மகிழ்வோம்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிக்கப்பட்டு விழிப்புணர்வு பேரணியானது, புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகில்  தொடங்கி நகர் மன்றத்தை சென்றடைந்தது.

இப்பேரணியின்போது தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

அதனைத் தொடர்ந்து தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கும், சார்நிலை அலுவலகங்களுக்கும்.

உள்ளாட்சி நிலை அலுவலகங்களுக்கும், தன்னாட்சி நிலை அலுவலகங் களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலைகள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  வழங்கினார்.

இந்நிகழ்வில், உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சித் துறை) முனைவர்.ப.நாகராசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி , கம்பன் கழகச்செயலர் ரா. சம்பத்குமார், இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top