Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

பட்டுப்புழு வளர்ப்பு தொழில் நுட்பம்: விவசாயிகளுக்கு புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

புதுக்கோட்டை

பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விளக்கம் அளித்த புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டம் , அரிமளம் ஒன்றியம், சீகம்பட்டி கிராமத்தில்  வசித்து வரும் நாச்சியப்பன் என்னும் விவசாயிக்கு  லாபம் ஈட்டும் வகையில் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து  செயல் விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்வில், புஷ்கரம் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஜான்சி, ஜெயந்தி, ஜிம்சி ரேச்சல், கமலபிரியா, கார்த்திகா, ஜெ.காவியா,  மா. காவியா, கீர்த்தனா, வெ. கிருத்திகா, க. கிருத்திகா, பாரதி  ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.

இதில், பட்டுப்புழு வளர்ப்பு உதவியாளர்  பங்கேற்று பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் அவற்றை பராமரிப்பு முறை பற்றி விளக்கி கூறினார். பட்டுப்புழு வாழ்க்கை சுழற்சி முறை பற்றி விளக்கி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top