Close
செப்டம்பர் 20, 2024 6:29 காலை

திருமயம் அருகே இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது

புதுக்கோட்டை

இளஞ்சாவூர் அருள்மிகு முத்துமாரியம்மன்

திருமயம் அருகே இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா பூச்சொரிதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நேற்று  (செவ்வாய்க்கிழமை) பூச்சொரிதலுடன் தொடங்கியது.

இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

இதையடுத்து, பல்வேறு கிராமங்களில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பல வண்ண மலர்களை கொண்டு வந்து பக்தர்கள் அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்.

அம்மனுக்கு சாத்தப்பட்ட மலர்களை புதன்கிழமை விடியற்காலை தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூக்களை பிரித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து 20-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடம்  பங்குனித் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து மார்ச் 26 முதல் 28- ஆம்  தேதி வரை பூக்குழி மற்றும் பொங்கல்  மற்றும் தேரோட்ட திருவிழா நடக்கிறது.

அன்று மாலை 5 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு கரகம் எடுத்து குடத்தின் விளிம்பில் கத்தி நிற்பதை காணவும், நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசிக்கவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். 30-ஆம் தேதி திருவிழா நிறைவடைகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top