Close
செப்டம்பர் 20, 2024 6:52 காலை

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட  மருத்துவ முகாம்… புதுகை எம்எல்ஏ தொடக்கம்

புதுக்கோட்டை

புதுகை அருகே வாகவாசலில் நடைபெற்ற வரும்முன் காப்போம் மருத்துவ முகாமை தொடக்கி வைத்த எம்எல்ஏ -டாக்டர் முத்துராஜா

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட  மருத்துவ முகாமினை புதுக்கோட்டை எம் எல் ஏ- முத்துராஜா தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை  அருகே வாகவாசல் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமினை எம்எல்ஏ மருத்துவர் வை. முத்துராஜா  தொடக்கி வைத்து பேசுகையில், தமிழக அரசு மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றி ஏழை எளிய மக்களை கண்டறிந்து  மருத்துவ சிகிச்சை  வழங்கி வருகிறது என குறிப்பிட்டார்.

பின்னர், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.  இந்நிகழ்வில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராம் கணேஷ் அனைவரையும் வரவேற்றார் வாகவாசல் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா முத்தையா முன்னிலை வகித்தார்.

ஏற்பாடுகளை, வட்டார மருத்துவ அலுவலர் பொன் சரவணன்  தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். இந்த மருத்துவ முகாமில்  சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமா னோர்பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top