புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக அரசு தலைமை மருத்துவமனைக்கு சக்கர நாற்காலி மற்றும் கட்டில் நன்கொடை வழங்கப்பட்டது.
சங்கத் தலைவர் ஆர்.சிவகுமார். தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை.முத்துராஜா, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி. ஆகியோர் கலந்து கொண்டு சக்கர நாற்காலி மற்றும் கட்டில் ஆகியவைகளை வழங்கினர்.
இவற்றை, மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் கே. ரவி, டாக்டர்கள் சரவணன், ஹசினா பேகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பத்திர எழுத்தாளர் அமரர் சண்முகம் நினைவாக அவரது குடும்பத்தினரால் இந்த பொருள்கள் நன்கொடை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன் ராஜா, வருங்கால தலைவர் அசோகன். பொருளாளர் சங்கர். முன்னாள் செயலாளர் தங்கராஜ், நாகரத்தினம், ஆரவாமுதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயலாளர்செந்தில் வேல் செய்திருந்தார்.




