Close
செப்டம்பர் 20, 2024 6:53 காலை

புதுகை கிழக்கு நான்காம் வீதி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில்கீழ 4ம் வீதி தென்புறம் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பூச்சொரி தல் விழா நடை பெற்றது.

புதுக்கோட்டையில் கிழக்கு நான்காம்  வீதி தென்புறம் உள்ள  அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயிலில்  ஞாயிற்றுக்கிழமை இரவு  பூச்சொரிதல் விழாவும், பூப்பிரித்தல் நிகழ்வு திங்கள் கிழமை காலையிலும் நடைபெற்றது.

புதுக்கோட்டை கிழக்கு நான்காம்  வீதி தென்புறம் உள்ள  அருள்மிகு  முத்துமாரி அம்மனுக்கு   19.03.2023 (ஞாயிற்றுக் கிழமை)  இரவு பூச்சொரிதல் விழா  வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி காலையில் இருந்தே நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள்  பால் குடத்துடன் ஏந்தியும் கோயிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

இதையொட்டி, இரவு  தொடங்கி அதிகாலை வரை காமராஜபுரம் உள்ளிட்ட  நகரின்  பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், மின் வண்ண விளக்குகளால் அலங்கார ஊர்திகளில் வைக்கப்பட்ட அம்மன் உருவச்சிலையுடன் பூத்தட்டு ஏந்தி கோயிலுக்குச் சென்று பூக்களை காணிக்கை யாகச் செலுத்தி வழிபட்டனர்.

புதுக்கோட்டை
பூக்களால் அலங்கரிக்கப் பட்ட கீழ 4 ஆம் வீதி முத்துமாரியம்மன்

பின்னர் ஆலயத்துக்கு  பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சார்த்தப்பட்டது.  விழாவை முன்னிட்டு இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விடியும் வரை நடைபெற்றன.  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மறுநாள் திங்கள்கிழமை (20.3.2023)  காலை பூக்கள் பிரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அம்மனுக்கு சார்த்திய பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை  விழா குழுவினர்   சிறப்புடன் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top