Close
செப்டம்பர் 20, 2024 4:41 காலை

புதுக்கோட்டை மகிமை நாயகி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள மகிமை நாயகி  ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில்  பூச்செரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது

புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற    மகிமைநாயகி  ஸ்ரீ முத்துமாரிஅம்மனுக்கு பூச்செரிதல் விழா   19.03.2023  ஞாயிற்றுக்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி காலையில் இருந்தே நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடையில் பால்குடம் ஏந்தியும் கோயிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் தொடங்கி அதிகாலை 4 மணிவரை புதுக்கோட்டை, பிருந்தாவனம், மச்சுவாடி,  காமராஜபுரம்  உள்ளிட்ட  நகரின்  பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், மின் வண்ண விளக்குகளால் அலங்கார ஊர்திகளில் வைக்கப்பட்ட அம்மன் உருவச்சிலையுடன் பூத்தட்டு ஏந்தி கோயிலுக்குச் சென்று பூக்களை காணிக்கை யாகச் செலுத்தி வழிபட்டனர் .

பின்னர் ஆலயத்தில் அம்மனுக்கு  பக்தர்கள் காணிக்காயாகக் கொண்டு வந்த பூக்கள் சார்த்தப்பட்டது .இதில் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விடியும் வரை நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பூக்கள் பிரிக்கும் நிகழ்வு 20.3.2023 -திங்கள்கிழமை காலையில் நடைபெற்றது. அம்மனுக்கு சார்த்தப்பட்ட பூக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது, ஏற்பாடுகளை  விழாக்குழுவினர், நிர்வாகிகள் சிறப்பாகச் செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top