Close
செப்டம்பர் 20, 2024 5:50 காலை

கல்விக்கு மீண்டும் முதலிடம் தந்த தமிழ்நாடு முதல்வருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி

புதுக்கோட்டை

சிகரம் சதிஷ்குமார்

கல்விக்கு மீண்டும் முதலிடம் தந்த தமிழ்நாடு முதல்வருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி பாராட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து, கல்வியாளர் கள் சங்கமம் அமைப்பின் நிறுவனர் சதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசின் 2023 – 24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள் திங்கள்கிழமை(20.3.2023)  தாக்கல் செய்தார்.

இந்த நிதிநிலை அறிக்கையில்,பள்ளி கல்விக்கென ரூ. 40,229 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் மாணவர்கள்நலன்சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் தமிழ்நாடு அரசு, சென்ற ஆண்டுநிதி ஒதுக்கீட்டை விட இந்த ஆண்டிற்கு 4,229 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளின்கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்குவதைஉறுதி செய்திடவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு கல்வித்துறை வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 110 கோடி ரூபாய் செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் நான்காம் ஐந்தாம் வகுப்பு களுக்கும் விரிவு படுத்தப்படுகிறது.

மாணவர்கள் கல்வி மற்றும் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் தமிழ்நாடு அரசு அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தவும், மேம்படுத்தவும் ஆண்டுதோறும் கூடுதல் நிதியை ஒதுக்கி வருவது தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் மீது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் தனிப்பட்ட பார்வையை காட்டுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் காலைநேரச் சிற்றுண்டிக்கென 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கூடுதலாக 18 லட்சம் மாணவர்களை இணைத்து மாணவர்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தியுள்ளது அரசு.

பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி கல்விப் பணியை காத்து நிற்கும்தமிழ்நாடு முதல்வருக்கும், நிதி அமைச்சருக்கும், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் கல்வியாளர்கள் சங்கமம் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top