Close
செப்டம்பர் 20, 2024 7:32 காலை

புதுகை நகராட்சி 20 வது வார்டில் கடந்த 7 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்யாததைக் கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முதியவர்

புதுக்கோட்டை

அடிப்படை வசதிகள் கோரி புதுகை நகராட்சி அலுவலகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட இருபதாவது வார்டு பகுதியான சோழா எஸ்டேட் பகுதியில் ஏழு வருடமாக பாதாள சாக்கடை மற்றும் சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து  அப்பகுதி யைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பதாகை ஏந்திய வாறு நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட இருபதாவது வார்டு திமுக கவுன்சிலர் கனகம்மன் பாபு, வார்டான சோலா எஸ்டேட் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக பாதாள சாக்கடை வசதி மற்றும் சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை

இது தொடர்பாக வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடமும் நேரில் சந்தித்து மனு கொடுத்தும் இதுநாள் வரை வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே  உடனடியாக அப்பகுதியில் சாலை வசதி மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி  நகராட்சி மற்றும் அப்பகுதி வார்டு கவுன்சிலர் கவனத்தை ஈர்க்கும் வகையில் நகராட்சி அலுவலகம் முன்பு  சிங்காரவேலு(75) என்பவர் தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top