Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பெருந்துறையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

ஈரோடு

எடப்பாடிக்கு ஆதரவாக வெளியான நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பெருந்துறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி.க.பழனிச்சாமி கடந்த ஜூலை 11 -ஆம் தேதி நடத்திய பொது குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான முடிவை அறிவிக்கலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து,  பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் ஆகியோர் தலைமையில் பெருந்துறை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், துணை தலைவர் உமா மகேஸ்வரன், மாவட்ட எம் ஜி ஆர் மன்றத் தலைவர் சாமிநாதன், இணைச் செயலாளர்கள் திங்களூர் கந்தசாமி, பழனிச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் பொன்னுதுரை, இணைச்செயலாளர் மைனாவதி கந்தசாமி, மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் மோகனசுந்தரம்,

வார்டு கவுன்சிலர்கள் வளர்மதி செல்வராஜ், குணசேகரன், கோமதி புனிதவதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top