Close
செப்டம்பர் 20, 2024 6:25 காலை

செய்தி மக்கள் தொடர்பு மானிய கோரிக்கை: டிஜிட்டல் திரையில் நேரலை

புதுக்கோட்டை

செய்தி மக்கள் தொடர்புதுறை மானிய கோரிக்கை நாளை நேரடி ஒளிபரப்பு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்  செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் மானியக் கோரிக்கை கூட்டம் நாளை காலை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது
நாளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத் தொடரில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மானியக் கோரிக்கை  நாளை (10.4.2023)  நடைபெறவுள்ளதை முன்னிட்டு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் காலை 10 மணி முதல் பொதுமக்களுக்கு சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் நேரலையாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தின் முக்கிய கூட்டத் தொடர்கள் பொதுமக்களின் பார்வைக்காக செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு எல்இடி வாகனத்தின் மூலம்  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஏற்கனவே நிதித்துறை பட்ஜெட், வேளாண்மைத் துறை மானியக்கோரிக்கை கூட்டம் பொதுமக் களுக்கு அதிநவீன எல்இடி வாகனத்தின் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதேபோல நாளை (10.4.2023) தாக்கல் செய்யப்படவுள்ள நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறையின் மானியக்கோரிக்கை மற்றும்  செய்தி மக்கள் தொடர்பு துறையின் மானியக் கோரிக்கை கூட்டத் தொடர் பொதுமக்களின் பார்வைக்காக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
 எனவே, பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டத் தொடரை நேரலையாக கண்டு களிக்க வேண்டுமேன புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top