Close
அக்டோபர் 6, 2024 1:34 மணி

புதுக்கோட்டை   ஆரோவில் கிட்ஸ் நர்சரி- பிரைமரி பள்ளியில்  பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆரோவில் கிட்ஸ் நர்சரி ,பிரைமரி பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்புவிழா

புதுக்கோட்டை    ஆரோவில் கிட்ஸ் நர்சரி,பிரைமரி பள்ளியில் பட்டமளிப்பு விழா மற்றும்  விளையாட்டு விழா  நடைபெற்றது.

புதுக்கோட்டை கீழ 4-ஆம் வீதியில் உள்ள   ஆரோவில் கிட்ஸ் நர்சரி, பிரைமரி பள்ளியில்  பட்டமளிப்புவிழா மற்றும் விளையாட்டு விழா விமரிசையாக நடைபெற்றது .

புதுக்கோட்டை   ஆரோவில் கிட்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில்   சிறுவர்கள் மற்றும்    மாணவர்களை   ஊக்குவிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவும் விளையாட்டு விழாவும்  நடந்தது.

விழாவிற்கு  கருவூல அலுவலர்(ஓய்வு)தட்சிணாமூர்த்திதலைமை வகித்தார்.  பள்ளி தாளாளர் முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார்.  பள்ளி முதல்வர் வசந்தமீனா  அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மாத்தூர் ஐயப்பா அக்ரோ கெமிக்கல் மற்றும் ஈஷா டெக் நிர்வாக இயக்குனர்  ஜெயக்குமார் கலந்து கொண்டு மாணவ செல்வங்களுக்கு  பட்டங்களை வழங்கினார்.

தொடர்ந்து விமலாதேவிஜெயக்குமார், பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

புதுக்கோட்டை
பட்டம் பெற்ற ஆரோவில் பள்ளி மழவையர்

பின்னர் நடைபெற்ற விளையாட்டு விழாவில் நச்சாந்துப்பட்டி மேல்நிலைப்பள்ளிவிளையாட்டுத்துறை ஆசிரியர்  முனைவர் என் ராகேஷ்,  காமராஜபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி  விளையாட்டுத்துறை ஆசிரியை பிரமிளா, முள்ளுர் அரசு மேல்நிலைப்பள்ளிவிளையாட்டுத்துறைஆசிரியை  பூந்தென்றல்,ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி  விளையாட்டுத்துறை ஆசிரியை சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டு  மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி  வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

நிறைவாக   மாணவி அப்ரா பாத்திமா நன்றி கூறினார். பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் சமூக ஆர்வலர்கள்-கலந்து கொண்டனர்.  முன்னதாக மாணவர் க்ரிஷ் முன்னிலையில் மாணவ மாணவியர்கள் அணிவகுப்பு  நடைபெற்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top