Close
செப்டம்பர் 20, 2024 6:38 காலை

அம்பேத்கர் பிறந்தநாள்: பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள்

இந்தியாவில் முதல் சட்ட அமைச்சர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவரில் முக்கியமான வரும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சருமான பாபாசாகேப் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நாளில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர், அரசியல் அமைப்பினர், சமூக ஆர்வலர் கள் அவரது உருவப் படத்திற்கும், உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த சட்ட அமைச்சர் ரகுபதி
திமுக: புதுகை தெற்கு மாவட்டச்செயலர், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ரகுபதி,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.
இதில், புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா, மாநில இலக்கிய அணிச்செயலர், முன்னாள் எம்எல்ஏ- ரா.சு. கவிதைப்பித்தன், நகரச்செயலர் ஆ. செந்தில், நிர்வாகிகள் த. சந்திரசேகரன், க. நைனாமுகமது, எம்.எம். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்:  தெற்கு மாவட்டத்தலைவர் ராம. சுப்புராம் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ. சந்திரசேகரன், ஜி.எஸ். தனபதி,  மாநில துணைத்தலைவர்  ஏ. இப்ராகிம்பாபு உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமையில் நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாவட்டச் செயலாளர்  எஸ்.கவிவர்மன் தலைமையில் நிர்வாகிகள், மதிமுக சார்பில் பொருளாளர் மாத்தூர் கலியமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள்,

திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் அறிவொளி தலைமையில் நிர்வாகிகள், அம்பேத்கார் பெரியார் காரல் மார்க்ஸ் பண்பாட்டு இயக்கம் சார்பில் டாக்டர் ஜெயராமன் தலைமையில் நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயசீலன் தலைமையில் நிர்வாகிகள்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்(வடக்கு) பாவாணன் தலைமையில் நிர்வாகிகள்,  அதிமுக (ஓபிஎஸ்) மத்திய மாவட்ட செயலாளர் ராஜே.ராஜசேகர் தலைமையில் நிர்வாகிகள்,பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார்.

புதுக்கோட்டை
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

டாக்டர் அம்பேத்கார் மக்கள் இயக்க மாநில செயலாளர் மெய்யர்,அரசு ஊழியர் ஐக்கிய பேரவை செயலாளர் தவசிகுமார்,தமிழக மக்கள் புரட்சிக் கழகம்மாவட்ட செயலாளர் வேம்பை சின்னத்துரை, ஆம் ஆத்மி கட்சி
மாவட்ட  தலைவர் அப்துல் ஜபார்.

தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி  ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்  கர்ணன், புரட்சி பாரதம் கட்சி நகரச் செயலாளர்  ரெங்கராஜ்,  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
மாவட்ட செயலாளர் யூசுப் ராஜா, புரட்சி பாரதம் கட்சி
மாவட்டச் செயலாளர் முள்ளூர் தியாகு, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் செந்தில் ராஜா ,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட  மக்கள் விடுதலை மாநில பொதுச் செயலாளர் க.சி.விடுதலை குமரன்,
மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி .

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி-புரட்சிகர பெண்கள் இயக்கம்
மாவட்டச் செயலாளர் சசிகலா,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது கனி.

தமிழ்நாடு காட்டுநாயக்கர் சமூக சீர்திருத்த சங்கம்
மாநிலத் தலைவர் சின்னையா,தமிழ்நாடு அருந்ததியர் சங்க
மாவட்ட தலைவர் சண்முகம்,இந்திய தேசிய இறையாண்மை கட்சி மாவட்ட செயலாளர் பாரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் நியாஸ் அகமது

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.என். ராமச்சந்திரன்,பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம்
மாவட்டச் செயலாளர் முருகேசன், விஜய் மக்கள் இயக்கம்
மாவட்ட பொறுப்பாளர் ஜாபர் பர்வேஸ், புதிய சமத்துவ கட்சி
மாவட்ட தலைவர் சசிகுமார், இந்திய மனித உரிமை கட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top