Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

தொகுதியில் தனது செயல்பாடு… மக்களிடம் அறிக்கை விநியோகித்த நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன்

மதுரை

தொகதியில் தனது செயல்பாட்டு அறிக்கையை பொதுமக்களிடம் விநியேகிக்கிறார், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய தொகுதியில் தனது செயல்பாடுகள் குறித்து மக்களிடம் அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விநியோகித்தார்.

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை ,புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்.கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை தமது செயல்பாட்டு அறிக்கையை, தொகுதி மக்களிடம் சமர்ப்பித்து வருவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பி னரின் மே முதல் நவம்பர் 2022  வரையிலான செயல்பாட்டு அறிக்கையினை, பொதுமக்களிடம் விநியோகித்தார்.

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆண்டுக்கு இரு முறை இதே போல தாம், மக்களுக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு அச்சிட்டு, அந்த பிரதிகளை, மதுரை மத்திய தொகுதி மக்களிடம் வழங்கி வருகிறார். அமைச்சரின் இந்த செயல்பாடு, தொகுதி மக்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

பொதுமக்கள் கோரிக்கை..
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில், குழாய்கள் பதிக்க  தோண்டப்பட்டு, குழாய்கள் பதித்த பிறகும் கூட தோண்டப்பட்டபள்ளங்களைசீரமைக்கப்படாததால் , பாதசாரி களும், இருசக்கர வாகன ஓட்டிகளும், கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. இந்த சாலைகளை துரிதமாக, மாநகராட்சி, சீரமைக்க , அமைச்சர்  நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top