Close
செப்டம்பர் 20, 2024 7:04 காலை

மதுரையில் அமைதியாக நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி

மதுரை

மதுரையில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி

மதுரையில் நடந்த   ஆர் எஸ். எஸ். பேரணியை, ராமகிருஷ்ண மடத்தலைவர் கமலானந்த மகாராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

ஆர் எஸ்.எஸ். மதுரை மாவட்டத் தலைவர் மங்களநாதன் தலைமையில், சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆர். எஸ் .எஸ். ஊழியர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

பாதுகாப்பு பணிக்காக மதுரை வடக்கு காவல் துணை ஆணையர் அரவிந்தன் , மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் சாய் பிரசாத் தலைமையில் 600 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரையில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, வண்டியூரில் இருந்து அம்பிகா திரையரங்கம் வரை  4.5 கிலோ மீட்டர்  தொலைவுத்து ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்றது. மதுரை வண்டியூரிலிருந்து பேரணி நிறைவடைந்த பகுதி வரை வழிநெடுகிலும் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top