Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

காலிப் பணியிடங்களை பூர்த்திசெய்யக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழகம் புதுக்கோட்டை மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மத்திய சங்கத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் எம்.தரணிமுத்துக் குமார், எஸ்.சாமியய்யா, பெல்லாராம், செந்தில்நாதன், பாலமுருகன், டி.ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார்.

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும். 8 மணி நேர வேலை உரிமையைப் பறிக்கும் தொழிற்சாலை சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top