Close
செப்டம்பர் 20, 2024 3:32 காலை

சென்னை, எண்ணூர் துறைமுகங் களில் ரூ. 296 கோடியிலான புதிய திட்டங்கள்: அமைச்சர் தொடக்கம்

சென்னை

சென்னை துறைமுகம்

சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் ரூ. 296 கோடியிலான புதிய திட்டங்களை அமைச்சர் சர்பானந்தா சோனவால் தொடங்கி வைத்தார்.
சென்னை,எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் ரூ. 296 கோடி மதிப்பீட்டிலான 8 திட்டங்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்கி வைத்தார்.
மத்திய அமைச்சர் சார்பானந்தா சோனாவால் இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தடைந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னை துறைமுகத்திற்கு வந்த சர்பானந்தா சோனாவால் சென்னை துறைமுகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள ரூ. 148 கோடியிலான நான்கு திட்டங்கள், ரூ. 56 கொடியிலான மூன்று திட்டங்களை தொடங்கி வைத்தார்.
சென்னை
சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் புதிய திட்டங்களை  தொடங்கி வைத்த மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால். உடன் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர், மேலாண்மை இயக்குனர் சுனில் பலிவால் 
ரூ 92 கோடியில் கான்கிரீட் சாலை
பின்னர் பொன்னேரி நெடுஞ்சாலை வல்லூர் சந்திப்பில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் வரை ரூ. 92 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலையை சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சார்பானந்தா சோனாவால் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது துறைமுகத்தின் பொருளாதார வளர்ச்சி கட்டமைப்பு திட்டங்கள், எளிமையான நடைமுறைகள் உள்ளிட்டவைகளில் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என  அறிவுறுத்தினார் அமைச்சர் சர்பானந்தா சோனோவால்.
புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம் இரு துறைமுகங்களின் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் மேலும் ஆண்டுக்கு 10 லட்சம் டன் சரக்குகளை கூடுதலாக கையாள முடியும். சரக்கு கப்பல்களுக்கு எரிபொருள்களை நிரப்புவதில் தேவையான கட்டமைப்பு வசதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சரக்கு கப்பல்களின் வருகை அதிகரிக்கும் என்றார் சர்பானந்த சோனாவால்.
இதில் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் எண்ணூர் காமராஜர் துறைமுக பொது மேலாளர்கள் சஞ்சய் குமார், பாலன்,  ராதாகிருஷ்ணன், கருப்பையா மற்றும் சென்னை துறைமுக துறை தலைவர்கள் கலந்து  கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top