Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

புதுக்கோட்டையில் தமுஎகச சார்பில் உலக புத்தக நாள் விழா

புதுக்கோட்டை

தமுஎகச சார்பில் புதுகையில் நடைபெற்ற உலக புத்தகநாள் விழாவில் பேசுகிறார், கவிச்சுடர் ரா.சு. கவிதைப்பித்தன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் உலகப் புத்தகத் தினவிழா நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ராசி பன்னீர் செல்வன் தலைமை வகித்தார். கவிஞர் புதுகைப்புதல்வன் வரவேற்றார்

இதில், எழுத்தாளன் சொன்ன கட்டுக் கதைகள், நசீபு, மேழி நகரும் தடம்  ஆகிய மூன்று நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நூல்களை மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவணன் அறிமுகம் செய்து பேசினார்.

துரைக்குமரன், கஸ்தூரி ரங்கன், கவிபாலா ஆகியோர் விமர்சன உரை ஆற்றினர். நூலாசிரியர்கள் புதுகை சஞ்சீவி, அராபத் உமர், நந்தன் கனகராஜ்  ஏற்புரை வழங்கினர்.

கவிச்சுடர் கவிதைப் பித்தன் உலகப் புத்தகத் தின சிறப்புரை ஆற்றினார்.  நிகழ்வில் திரளான இலக்கிய ஆர்வலர்கள், தமுஎகச நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வுகளை கவிஞர் ரேவதி  ஒருங்கிணைத்தார். .மாவட்டப் பொருளாளர் ஜெயபாலன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top