Close
செப்டம்பர் 20, 2024 6:52 காலை

கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி அன்பளிப்பு

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கி வைக்கிறார், எம்எல்ஏ சின்னதுரை.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை , அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  முதன்மைக்கல்வி அலுவலர்(ஓய்வு) முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்களின் சொந்த நிதி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ( 1,05,000/-) செலவில்  குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது.

இதையடுத்து  இன்று 27.04.2023  பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை மாணவர்களின்பயன்பட்டுக்கு திறந்து வைத்தார்.

இதில், நன்கொடையாளர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி, ஒன்றியகவுன்சிலர், தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top