Close
செப்டம்பர் 20, 2024 3:43 காலை

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மே தின விழா கொண்டாட்டம்

ஈரோடு

கோபியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மேதின விழாவில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினர்

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் மே தின விழா கொண் டாட்டத்தில்,  முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்  ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர்எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மே தின விழா கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு சுமை தூக்குவோர், ஆட்டோ ஓட்டுனர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்க ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் கொடியேற்றி இனிப்பு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் பெருந்துறை தொகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன.

பெருந்துறை வாரச்சந்தை அருகே அண்ணா சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.  இதையடுத்து  தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை,முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினர்.

ஈரோடு ரோடு, வேளாண் விற்பனை கூட்டுறவு சங்கம் அருகே அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்குதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு மருத்துவமனை,மணல் பிரிவு அருகே அண்ணா சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்குதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெருந்துறை பஸ் நிலையம் அருகே அண்ணா ஆட்டோ தொழிற்சங்கத்தினர் சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை, பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ், பெருந்துறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.  நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top