Close
ஜூன் 8, 2026 12:04 மணி

உலக செவிலியர் தின விழா.. அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு பாராட்டு

புதுக்கோடை

புதுக்கோட்டை அரசு முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனையில் நடைபெற்ற உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12- ல்  உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நல சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு அவர்களின் மகத்தான மருத்துவ மக்கள் பணி சேவையை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் மருந்தாளுநர்கள் நல சங்கத்தின் மாநில செயலாளர் வசந்த்குமார், மாநில தலைவர் கார்த்திக், மற்றும் சமூக ஆர்வலர்கள் பிரின்ஸ், ஜெகன், கலியமுத்து, இதயம் முரளி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top