Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிறுவனர் நினைவேந்தல்

புதுக்கோட்டை

பாவலர் மீனாட்சி சுந்தரம் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (தெற்கு) கந்தரவக்கோட்டையில் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நிறுவனர் நினைவு நாளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப் பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் மாநில மையத்தின் ஆணைக்கிணங்க மாவட்ட மையத்தின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் இன பாதுகாவலர் பாவலர் மீனாட்சி சுந்தரம் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (தெற்கு) கந்தர்வக் கோட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் த.கோவிந்தராசு , மாவட்ட கொள்கை விளக்க செயலாளர் மு. அப்துல் ஹமீது ,ஒன்றியத் தலைவர் ச .பழனிவேல், ஒன்றியச் செயலாளர் ம.சின்னராஜா.

கறம்பக்குடி  ஒன்றிய முன்னாள் நிர்வாகி வாசுதேவன், மகளிர் அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி மீனாம்பாள் , அருள்மொழி மாநில மாவட்ட ஒன்றிய செயற்குழு பொதுக்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து மாணவச் செல்வங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top