Close
செப்டம்பர் 20, 2024 5:57 காலை

திருமயம் அருகே மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

புதுக்கோட்டை

திருமயம் தாலுகா கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் பாண்டியன்- ஓம் நமச்சிவாயா குழு சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் பாண்டியன் மற்றும் ஓம் நமச்சிவாயா உறுப்பினர்களுடன் சேர்ந்து ஏழை எளிய மக்களைக் கண்டு அவர்களுக்கு உதவும் வகையில் மாணவ மாணவிகள் கல்வி பயில உதவித்தொகையும், மாற்றுத் திறனாளிகளுக்கு வண்டிகள் வழங்குவது, முதியோர் இல்லத்திற்கு உணவு மற்றும் உபகரணங்கள் வழங்குவது. மேலும் விதவை பெண்களுக்கு தையல் மெஷின் பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பேரையூர் கிராமத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய ஆதரவற்ற ஏழை எளிய இருபதுக்கு மேற்பட்ட முதியோர் களுக்கு பேரையூர் கோவில் அருகே ஓம் நமச்சிவாயா அறக்கட்டளை சார்பில் சிங்கப்பூர் பாண்டியன் ஏற்பாட்டில் ஒரு மாதங்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் ஓம் நமச்சிவாய அறக்கட்டளை உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top