Close
செப்டம்பர் 20, 2024 7:05 காலை

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 % தேர்ச்சி

புதுக்கோட்டை

பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பிடித்த வெங்கடேஸ்ரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம்போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மாணவர்கள் 30 மாணவிகள் 46 மொத்தம் தேர்வு எழுதிய 76 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

திவ்ய ஸ்ரீ, பார்கவி, முகமது ரிஸ்வான், ஸ்ரீவர்ஷினி, கயல்விழி, கோபிகா ஸ்ரீ, ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகள்

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் சிஇஓ காவியாமூர்த்தி, பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் அபிராம சுந்தரி.

ஆசிரியர்கள்;; கமல்ராஜ், ராஜாமணி, ஜெயசுதா, பவானி, சித்திரைச்செல்வி, சத்தியராஜ், சின்னையா சரவண பவா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வரலெட்சுமி, கோமதி மேலாளர் ராஜா, காசாவயல் கண்ணன், உதயகுமார், நீலகண்டன், சரசு ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top