Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

திமுக அரசைக்கண்டித்து பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடட பாஜக மகளிரணியினர்

கள்ளச்சாராய சாவுக்கு காரணமான திமுக அரசை கண்டித்தும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் புதுக்கோட்ட்டை பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விஷ சாராயத்தால் மரணம் அடைய காரணமாக இருந்த திமுக அரசை கண்டித்தும் பதவி விலகக் கோரியும், தேர்தல் காலத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடையை படிப்படியாக மூடுவதாக அறிவித்துவிட்டு தற்போது வரை டாஸ்மார்க் கடைகளை மூடாமல் தொடர்ந்து டாஸ்மார்க் கடைகள் நடத்தி வருவதைக்கண்டித்தும்,  இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டி,  விஷ சாராயத்தால் மரணம் அடைய காரணமாக இருந்த திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் ஏவிசிசி கணேசன் சித்ரா அமுதவல்லி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஜேபினர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top