Close
செப்டம்பர் 20, 2024 5:46 காலை

புதுக்கோட்டை மாவட்ட சிறைசாலை அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் போலீஸார் திடீர் ஆய்வு நடத்தினர்

புதுக்கோட்டை சிறைச்சாலை-கூர்நோக்கு இல்லத்தில் 50 -க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட சிறைசாலை மற்றும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சிறைச்சாலை மற்றும் கூர்நோக்கு இல்லத்தில் 50 -க்கும் மேற்பட்ட போலீசார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.

டி.எஸ்.பி. செல்வம் தலைமையில் உள்ளே சென்ற போலீசார், அங்கு செல்போன், கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப் பட்ட போதை பொருட்கள், போதை மாத்திரை ஏதும் உள்ளதா என்று சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என்று 442 சிறைவாசிகள் உள்ளனர். இவர்கள் அனைவரிடத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் சிறைவாசிகள் அறை மற்றும் வளாகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை நடைபெற்றது.

மேலும் சிறைவாசிகளிடம் ஆயுதம் மற்றும் ஆயுதம் போன்ற பொருட்கள் ஏதும் உள்ளதாக என்றும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இதே போல, அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் தீவிர சோதனை நடை பெற்றது. இந்த சோதனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்டது. சோதனை நடைபெற்ற போது சிறைவாசிகளை சந்திக்க வந்தவர்கள் அனுமதிக்கப் பட வில்லை.

சோதனையை முன்னிட்டு சிறைச்சாலை வளாகத்திதை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.சிறைச்சாலை, கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு நிலவியது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top