Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

பேலஸ் சிட்டி ரோட்டரி சார்பில் திருக்கோகர்ணம்  அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

புதுக்கோட்டை

பேலஸ் சிட்டி ரோட்டரி சார்பில் திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளிக்கு அமைத்த அலங்கார வளைவு

பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர் நிலைப்  பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்   திருக்கோகர்ணம்  அரசு மகளிர் உயர் நிலைப்  பள்ளிக்கு நலத்திட்டம் வழங்கும் விழா தலைவர்  வேலுசாமி தலைமையில் நடைபெற்றது

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி முன்னிலை வகித்தார்.செயலாளர் பாலகிருஷ்ணன்  அனைவரையும் வரவேற்றார்.

ரோட்டரி   ஆளுநர்  ஜெரால்டு  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பள்ளிக்கு ஒலிபெருக்கி, மைக் செட் தொகுப்பை  தலைமை ஆசிரியர் சரஸ்வதியிடம் வழங்கினார்.

மேலும்,  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட    நடைபாதை நுழைவுவாயில்  பெயர்ப் பலகையினை திறந்து வைத்து பேசினார். நிகழ்வில்  துணைஆளுநர்கள்பேராசிரியர்கருப்பையா,ஆரோக்கியசாமி,மண்டல செயலாளர்  வி.ஆர்.வெங்கடாசலம்.

புதுக்கோட்டை
பேலஸ் சிட்டி ரோட்டரி சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்

நிர்வாகிகள்   அரசு வழக்கறிஞர் செந்தில்,   கல்வியாளர்கள், ரவிச்சந்திரன் காசிநாதன், வீரன்,  ராஜேந்திரன், முன்னாள் தலைவர்  செந்தில்,        உறுப்பினர்கள்,  திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர் நிலைப்  பள்ளி ஆசிரியர்கள்   உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர். நிறைவாக  பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top