Close
செப்டம்பர் 20, 2024 6:56 காலை

புதுக்கோட்டையில்  நடந்த   சர்வதேச  ரேட்டிங்  செஸ் போட்டி: அமைச்சர் ரகுபதி பரிசளிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசு,விருது வழங்கினார்.

புதுக்கோட்டையில் நடந்த சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி யில் வென்றவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசு மற்றும் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் கல்லூரியில் இரண்டாவது சாய் சரவணா அகாடமி சர்வதேச ரேட்டிங் சதுரங்கபோட்டி நிறைவு பெற்றது.  இப்போட்டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

புதுக்கோட்டை
பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

சென்னையைச் சேர்ந்த  விஜய் ஸ்ரீராம் முதல் பரிசையும், மதுரையைச் சேர்ந்த செல்வமுருகன் இரண்டாமிடத்தையும், சென்னையைச் சேர்ந்த  சரவணன் மூன்றாமிடத்தையும், மதுரையைச் சேர்ந்த  அருள் பிரகாஷ் நான்காமிடத்தையும், சிவகங்கையைச் சேர்ந்த  கண்ணன் ஐந்தாமிடத்ததையும்  வென்றனர்.

இப்போட்டியில் நானூறுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டனர். திருச்சியை சேர்ந்த சர்வதேச நடுவர் தினகரன் இப்போட்டி யினை நடத்தினார்.

முதல் பரிசு ரூ.20 ஆயிரம்  உள்பட  150  -க்கும் மேற்பட்ட ரொக்கப் பரிசுகள், வெற்றிக் கோப்பைகள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்போட்டிக்கான  ஏற்பாடுகளை சாய் சரவணா அகாடெமி நிர்வாகிகள்  அடைக்கலவன், அங்கப்பன், பேராசிரியர் கணேசன் உள்ளிட்ட மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள் மற்றும் செந்தூரான் பொறியியல் கல்லூரியின் நிர்வாகிகள்  செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top