Close
செப்டம்பர் 20, 2024 6:29 காலை

புதுக்கோட்டையில் மாநில ரேப்பிட்- விரைவு சதுரங்கப்போட்டி

புதுக்கோட்டை

மாநில அளவிலான  ரேப்பிட்- விரைவு சதுரங்கப்போட்டி  புதுக்கோட்டை  செந்தூரான் பொறியியல்  கல்லூரியில் (03.06.2023)  தொடங்கியது.

புதுக்கோட்டை  மாவட்ட   செஸ்  சங்க தலைவர்  தொழிலதிபர்  . ராமசந்திரன்  தலைமையில்,  மாவட்ட செஸ் சங்க  சார்பில்  இப்போட்டி  நடத்தப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு  பகுதியிலிருந்தும்  இருநூற்றுஐம்பதுக்கும் மேற்பட்ட  வீரர்களும், வீராங்கனைகளும் காலத்து கொண்டு  விளையாடினர்.

போட்டியினை  சர்வதேச  செஸ்  நடுவர்  ஆனந்த பாபு,  நடுவர்கள்  செல்வபிரகாஷ், அங்கப்பன், மணிகண்டன், பார்த்திபன், வினிதா  செல்வம் ஆகியோர்  நடத்தினர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தொடங்கிய மாநில ரேபிட் சதுரங்கப்போட்டியில் பங்கேற்ற வர்கள்

இந்த போட்டியின்  தொடக்க  விழாவில் செந்தூரான் பொறியியல்  கல்லூரியின்  நிர்வாகி  முனைவர்  கார்த்திக், விருதுநகர்  மாவட்ட  செஸ்  சங்க  செயலர் சுந்தர்ராஜன், புதுக்கோட்டை மாவட்ட   செஸ் சங்க  நிர்வாகிகள்   முனைவர் கணேசன், அடைக்கலவன், அங்கப்பன், ஜெயக்குமார்,  செல்வம், இக்பால், பார்த்திபன், 90 வயது செஸ் வீரர்  சுப்ரமணியம் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை
90 வயது சதுரங்க வீரர் சுப்பிரமணியன்

ஒன்பது  சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியில் விளையாடுபவர்களுக்கு தலா  ஐந்து நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.  .   ஞாயிறு மதியம்  தமிழ் நாடு மாநில அதி விரைவு பிளிட்ஸ் செஸ் போட்டியும் நடை பெற உள்ளது. இப்போட்டியில் இரண்டு போட்டிகளுக் கான  பரிசுகள்  வழங்கப்பட உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top