Close
செப்டம்பர் 20, 2024 7:17 காலை

ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை

ஆக்கிரமிப்பாளரிடமிருந்து இடத்தை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்த கிராமத்தினர்

புதுக்கோட்டை அருகே ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்டு தர வலியுறுத்தி  கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா,  அன்னவாசல் ஒன்றியம், மாங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பையா இவரது இடத்தில் கடந்த கஜா புயலின் போது மரம் மற்றும் கொட்டகை சேதமடைந்தது அதனால் நகரப்புறத்தில் வசித்து வருகிறார்.

நான்காண்டு காலம் பிறகு கிராமத்தில் உள்ள இடத்தை பார்த்தபோது பாண்டி செல்வம் என்பவர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பராமரித்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பாண்டி செல்வத்திடம், கருப்பையா குடும்பத்தார் மற்றும் கிராமத்தினர் அந்த இடத்தை மீட்டு தர வேண்டும் என பலமுறை  பேசியுள்ளனர்.

அதற்கு, என்னால் எந்த பிரச்னையும் வராது இந்த இடத்தை எப்ப வேண்டுமானாலும் தங்களிடம் திருப்பித் தருகிறேன் என்று பதில் அளித்துள்ளார் .ஆனால் அந்த இடத்தில் தற்போது கழிப்பறை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யும்போது, கருப்பையா என்பவர் குடும்பத்தினருடன் சேர்ந்து தடுத்துள்ளார்

பாண்டி செல்வத்திடம் இருந்து தங்களது இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கருப்பையா மற்றும் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் மனு அளிக்க வந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top