Close
செப்டம்பர் 20, 2024 6:29 காலை

புதுகை நகராட்சி பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

புதுக்கோட்டை

புதுகை ராஜகோபாலபுரம் நகராட்சி பள்ளியில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் சார்பாக குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வி.விக்டோரியா தலைமை வகித்தார். குழந்தைத் தொழிலாளர்  முறை அகற்றுவதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் கே.சதாசிவம், நலக்குழும உறுப்பினர் எம்.சுவாமிநாதன் ஆகியோர்  விளக்கிப் பேசினர்.

இதில், பங்கேற்ற மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்டக் கல்வி ஆய்வாளர் குரு.மாரிமுத்து ஆகியோர், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை நடத்திய  மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியர் த.ரேவதி ஒருங்கிணைத்தார். நிகழ்வில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top