Close
செப்டம்பர் 20, 2024 5:33 காலை

புதுக்கோட்டைஸ்ரீ அரியநாச்சியம்மன் ஆலய திருவிழா கோலாகலம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆனித்திருவிழா

புதுக்கோட்டைஸ்ரீ அரியநாச்சியம்மன் ஆலயத்தில் ஆனித்திரு  விழா நடைபெற்றது.

புதுக்கோட்டைநகரில் அமைந்துள்ள  ஸ்ரீ அரியநாச்சியம்மன் ஆலய த்தில்  ஆனித்திருவிழாவையொட்டி -புஷ்பா வியாபாரிகளால் நடத்தப்படும்  மண்டக்கபடி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.
புதுக்கோட்டைநகரில் அமைந்துள்ள  ஸ்ரீ அரியநாச்சியம்மன் ஆலயத்தில்  புஷ்பா வியாபாரிகளால் நடத்தப்படும் மண்டக்கபடி விழாவை முன்னிட்டு   புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி  கோயிலிருந்து அருள்மிகு  அரியநாச்சியம்மன்  கோயிலுக்கு தெற்குராஜவீதி, மேலராஜவீதி, வடக்குராஜவீதி,  பிருந்தாவனம் வழியாக மேளதாளத்துடன்  சென்று    பக்தர்கள்  கரகம், பால்குடம்  பறவைக்காவடி எடுத்து வந்தும் அலகு குத்தியும்  தங்களது நேர்த்திக்கடனை  நிறைவேற்றினர்.

ஸ்ரீ அரியநாச்சியம்மன்  அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பல்வேறு  16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.  பின்னர்  மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  ஏராளமான பக்தர்ககள் சாமி  தரிசனம் செய்தனர்.கோவிலில்  அன்னதானம்  நடைபெற்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top