Close
செப்டம்பர் 20, 2024 2:43 காலை

புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் (சிஐடியு) வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் (சிஐடியு) வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திட்டத் தலைவர் எஸ்.சித்தையன் தலைமை வகித்தார்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஊழியர் சங்கத்தின் திட்ட செயலாளர் கு.நடராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா, மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் ஆர்.மணிமாறன்  உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்க் மேன் பணியாளர் களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top