Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ,மாணவியர் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ,மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

அரசு இசைப்பள்ளியில் நிகழ் ஆண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7 -ஆம் வகுப்பு தேர்ச்சியும், நாதசுரம், தவில், தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும்.

12 வயது முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்காலம் 3 ஆண்டுகள். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4  மணி வரை. பயிற்சிக் கட்டணம் ரூ.350 – ஆகும்.

அரசுச் சான்றிதழ் படிப்பான இப்பயிற்சியில் அரசுத் துறையில் வேலை வாய்ப்புகளும் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நிகழ்ச்சி வழங்க வாய்ப்புகளும் மற்றும் இலவசப் பேருந்து சலுகை, தங்கும் வசதி மற்றும் கல்வி உதவித் தொகை அரசு விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கு மிதிவண்டி அரசு விதிகளின்படி வழங்கப்படும். மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை யாக மாதந்தோறும் ரூ.400- வழங்கப்படும்.

எனவே ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி,  எண்.29-70, லட்சுமி நகர், நரிமேடு, சமத்துவபுரம் வழி, புதுக்கோட்டை- 622005  என்ற முகவரியில் தலைமையாசிரியரை நேரில் அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு 04322-225575, 9486152007 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top