Close
செப்டம்பர் 20, 2024 6:43 காலை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு வைப்பறை: ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பறையில் ஆய்வு செய்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டையிலுள்ள  மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள்  பாதுகாப்பு வைப்பறை ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில்  (24.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும் காலாண்டு தணிக்கைக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக்க வைக்கப்பட்டிருந்து  அறையை அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில்; திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பெங்களூர் பெல் நிறுவனத்தில் புதிதாக தயாரிக்கப் பட்ட (EVMs) Control Unit 600 வரப்பெற்றது.  இவற்றை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  பாதுகாப்பு வைப்பறையில், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்; முன்னிலையில் இன்றையதினம் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது து.தங்கவேல், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சோனைகருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top