Close
செப்டம்பர் 20, 2024 6:53 காலை

கவிதை பக்கம்… மரியாதை..

தமிழ்நாடு

கவிதைப்பக்கம்.. மரியாதை

மரியாதை..

மரியாதை
மூத்த
வயதோர்க்கு கிடைக்கும்- உழைத்து
வாழ்வில்
உயர்ந்தோர்க்கும் கிடைக்கும்
ஆனால்
முடங்கி கிடந்தால்
கிடைப்பதில்லை

மரியாதை
சாதித்தால் கிடைக்கும்
சம்பிரதாயத்துக்கு கூட
கிடைக்கும்
ஆனால்
சதியாளர்களுக்கு
கிடைப்பதில்லை

மரியாதை
உண்மை யானவர்களுக்கு
கிடைக்கும்- நல்ல
தன்மையானவர்களுக்கும்
கிடைக்கும்
ஆனால்
வன் சொல்லாளர்களுக்கு
கிடைப்பதில்லை

மரியாதை
நாட்டை காக்கும் வீரர்களுக்கு
கிடைக்கும்
நலிந்தோர்களுக்கு உதவும்
நல்லார்க்கு கிடைக்கும்- கபட
நாடகமாடுவோர்களுக்கு
கிடைப்பதில்லை

மரியாதை
வெற்றியாளர்களுக்கு கிடைக்கும்
வீர விளையாட்டில் சாதித்தாலும்
கிடைக்கும்
விமர்சிப்பவர்களுக்கும்
வேடிக்கை பார்ப்பவர்களுக்கும்
கிடைப்பதில்லை

மரியாதை
திறமையானவர்களுக்கு கிடைக்கும்
செயற்கரிய செய்வாருக்கும்
கிடைக்கும்
தினம் வெந்ததை தின்று
விதிவழி செல்வோருக்கு
கிடைக்காது

அறிஞர்களுக்கு கிடைக்கும்
ஆளுமைகளுக்கும் கிடைக்கும்
மரியாதை
அதிகாரத்திற்கு உட்பட்டதும் இல்லை
அன்பிற்கு அப்பாற்பட்டதும் இல்லை
அது
மனதில் விளைவது
மானத்திற்கு நிகரானது!!

 

#மரு.மு.பெரியசாமி # புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top