Close
செப்டம்பர் 20, 2024 3:57 காலை

கந்தர்வகோட்டை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 58 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தி. அனிதா முன்னிலையில் மீட்கப்பட்ட 58 ஏக்கர் கோயில் நிலம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம் வேம்பன் பட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த  58 ஏக்கர் கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

இங்குள்ள  அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 8 கோடி மதிப்புள்ள புதுப்பட்டி (புல எண் :115 ல்)யில்  உள்ள 58 ஏக்கர் 29 சென்ட் நிலம் இந்து சமய அறநிலைத்துறையினரால் மீட்கப்பட்டது.

இதில்,புதுக்கோட்டை உதவி ஆணையர் தி. அனிதா, இந்து சமய அறநிலையத்துறை ஆலய நிலங்கள் வட்டாட்சியர் ரெத்தினாவதி,  திருக்கோயில் செயல் அலுவலர் சந்திரசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு திருக்கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top