Close
செப்டம்பர் 20, 2024 7:06 காலை

காவேரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க யுசிபிஐ வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஐக்கிய கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலக்குழு கூட்டம்

தற்பொழுது கிடப்பில் போடப்பட்டுள்ள காவேரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி குழு கூட்டம் புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிர்வாக குழு கூட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கிடப்பில் போடப்பட்டுள்ள காவேரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் கவனத்தை  ஈர்ப்பதற்காக  புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர் பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் பிரசார பேரணி நடத்துவது.

மாணவ மாணவிகளுக்கு பயன்பட்டு வந்த கல்வி தொலைக்காட்சியை மீண்டும் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிப்பூரில் மாதக் கணக்கில் நடைபெற்று வரும் கலவரத்தை மோடி அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது. எனவே ஒன்றிய அரசு உடனடியாக கலவரத்தை தடுத்து நிறுத்தி மணிப்பூர் மக்களிடம் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகள் புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டை மன்னருக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மணிமண்டபம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இதனால் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே உடனடியாக மணிமண்டபம் கட்ட தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top