Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க ஆபரணங்கள்

புதுக்கோட்டை

பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் கிடைத்த தங்க ஆபரணம்

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி தோடு, எலும்பு முனை கருவி, வட்ட வடிவ சிவப்பு நிறமுடைய கார்னிலியன் பாசி மணி ஒன்றும் கிடைத்துள்ளது..

தமிழக அரசு தொல்லியல் துறை பொற்பனை கோட்டையில் தொலைநிலை உணர்திறன் முறையான கண்டறிதல் மற்றும் வரம்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் ஏக்கர் பரப்பளவில் வாழ்விடம் இருந்ததை கண்டறிந்து தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  கடந்த மே மாதம் 20 -ஆம் தேதி அகழாய்வு பணியினை தொடங்கி வைத்தார். அகழாய்வு பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது

பொற்பனைகோட்டையில் நடைபெற்று வரும் இந்த அகல ஆராய்ச்சியில் இதுவரை வட்டச் சில்லுகள் கண்ணாடி வளையல்கள் கண்ணாடி மணிகள் சுடுமண் விளக்கு தகளிகள் சூது பவள மணி உள்ளிட்ட 159 தொல்பொருட்களும் கீறல் குறியீடு கிடைத்துள்ளது

மேலும் இந்த அகழ்வாயில் மெருகேற்றப்பட்ட பீங்கான் பானை ஓடுகள் கருப்பு நிற பானை ஓடுகள் சிவப்பு நிற பானை ஓடுகள் கூரை ஓடுகள் துளையிடப்பட்ட பானை ஓடுகள் என பல்வேறு வகையான பானை ஓடுகளும் கிடைத்துள்ளது

இதன் தொடர்ச்சியாக பல்வேறு தொழில் பொருட்கள் கிடைத்து வரும் நிலையில் ஒப்பனைக்கோட்டை அகழாய்வில் மூன்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் என்று கிடைத்துள்ளது 1.33 சென்டிமீட்டர் ஆழத்தில் ஆறுகள் கொண்ட தங்க மூக்குத்தி தோடு ஒன்றும் எலும்பு முனை கருவி ஒன்றும் வட்ட வடிவ சிவப்பு நிறம் உடைய கார்னிலியன் பாசிமணி ஒன்றும் கிடைத்துள்ளது.

எலும்பு முனை கருவி நூல் நூற்பதற்காகவும் நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது காரணியின் கற்கள் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது தற்போது இங்கு கிடைத்துள்ளது.

வட்ட வடிவிலான சூது பவள மணியானது காருண்யா கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது தற்போது கிடைத்திருக்கும் சூது பவள மணியானது வரலாற்று தொடக்க காலத்தில் இருந்து உள்நாட்டு வணிகத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது

ஆறு இதழ் கொண்ட 0.26 கிராம் எடையுள்ள தங்க மூக்குத்தி தோடு கிடைத்திருப்பது சங்ககாலத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக தொல்லியல் ஆய்வுக்கழக நிர்வாகிகள் ஆ. மணிகண்டன், கரு, ராஜேந்திரன் ஆகியோர்  தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top