குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை குளத்தூர் மகாத்மா தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினம் , கல்வி வளர்ச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளியின் ஆலோசகர் ஓஎஸ்பி .ராஜ்மோகன் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் எஸ். ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
சுதர்சன் வித்யா மந்திர் மெட்ரிக். பள்ளி தாளாளர் வி.முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுவர்கள், மாணவர்கள் காமராஜர் வேடம் அணிந்து வந்த பேரணியை தொடக்கி வைத்தார்.
அரசு வழக்கறிஞர் சதிஷ் என்ற நடராஜன், புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். கண்காட்சியில் காமராஜரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
பின்னர் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காமராஜர் வேடம் அணிந்து வந்த மாணவ, மாணவிகள் பேசினர். பின்னர் மாணவ, மாணவிகள் நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் வி.முருகேசன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை பி.புவனேஸ்வரி நன்றி கூறினார்.