Close
செப்டம்பர் 20, 2024 4:07 காலை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா.. கல்லூரி மாணவர்களுக்கான கலைப்போட்டிகளில் வென்ற மாணவர்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா போட்டிகளில் வென்றவர்கள் விவரம் அறிவிபு்பு

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) தொடங்கி வரும் ஆக. 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட பல்கலைப் போட்டிகளில்  வென்ற கல்லூரி மாணவர்கள் பட்டியல்  வெளியிடப் பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6 -ஆவது புத்தகத் திருவிழாவை நகர்மன்றத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆக. 6 -ஆம் தேதி வரை நடத்தவுள்ளன.
இந்தப் புத்தகத் திருவிழாவையொட்டி, கல்லூரி மாணவர் களுக்கான பேச்சு, கவிதை மற்றும் குறும்படப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டன. இதில் பேச்சுப் போட்டிக்கான முடிவு அப்போதே வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கவிதை மற்றும் குறும்படப் போட்டிக்கான முடிவுகளை கல்லூரி மாணவர் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரும், வாசகர் பேரவையின் செயலருமான பேரா. சா. விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.
குறும்படப் போட்டியில் மொத்தம் 11 குறும்படங்கள் பங்கேற்றன. இதில், முதல் பரிசை ஜெஜெ கல்லூரி மாணவர் எம். சுந்தர மணிகண்டன், இரண்டாம் பரிசை ஜெ.ஜெ. கல்லூரியின் மாணவி மெ. சுபா, மூன்றாம் பரிசை ஜெ.ஜெ. செவிலியர் கல்லூரி மாணவி அபிராமி ஆகியோரும் வென்றனர்.

கவிதைப் போட்டியில் மொத்தம் 46 பேர் பங்கேற்றனர். இதில், முதல் பரிசை ஜெ.ஜெ. கல்லூரி மாணவி சு. தாரணி, இரண் டாம் பரிசை இலுப்பூர்  மதர் தெரசா கல்லூரி மாணவர் து. லட்சுமணன், மூன்றாம் பரிசை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி எஸ். வீரலட்சுமி ஆகியோரும் வென்றனர்.இவர்களுக் கான பரிசுகள் புத்தகத் திருவிழாவின்போது வழங்கப்படும் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top