Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச் செல்வி, கட்சியின் நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரம ணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனிவேல், கனகராஜ், பாண்டியராஜன், நதியா, உதயம் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top