Close
செப்டம்பர் 20, 2024 5:34 காலை

போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி ஏற்பு நிகழ்வு

புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையுடன் இணைந்து நடத்திய போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணிநடைபெற்றது.

போதைப்பொருள்பயன்பாட்டிற்கு எதிரான சமூக விழிப்புணர்வு பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கையின் ஒருபகுதியாக கடந்த ஆண்டுபோதைப் பொருள் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்நடத்தப்பட்டன.

அதன்தொடர்ச்சியாக, நிகழ் ஆண்டில்  பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போதைப் பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு  என்ற முழக்கத்தை முன்னிறுத்தி பெருந்திரள் போதை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பள்ளியின் முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேரணியை புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மணமல்லி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பள்ளியிலிருந்துதொடங்கிய பேரணியானது  மேலமேட்டுத் தெரு வழியாக திருவப்பூர் ரயில்வேகேட் சென்று மாரியம்மன் கோயில்வழியாக பள்ளியில் நிறைவடைந்தது. போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வுபேரணியில்“ கைவிடு கைவிடு மதுப்பழக்கத்தைக் கைவிடு,” “குடிக்காதே குடிக்காதே மதுபானங்களைக் குடிக்காதே,” “அழிக்காதே அழிக்காதே குடும்பநலனை அழிக்காதே” போன்ற முழக்கங்களை எழுப்பியது கடைவீதிகளில் இருந்த  பொதுமக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

நிறைவாக மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்தநிகழ்வில் காவல்துணைஆய்வளர்பாலாஜி, காவலர்கள் சங்கரநாராணண், கந்தவேல், செபஸ்டின்,  பள்ளியின் துணைமுதல்வர்குமாரவேல், பள்ளியின் ஒருங்கிணைப் பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, ஆசிரியர்கள் கமல்ராஜ், காசாவயல்கண்ணன், உதயகுமார், கணியன்செல்வராஜ், ராமன் மற்றும்  ஏராளமான மேல்நிலை வகுப்புஆசிரியர்கள்; கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top