Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக் கான சிறப்பு முகாம்கள்

புதுக்கோட்டை

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் முதல் கட்டமாக (Phase-I) 24.7.2023 முதல் 4.8.2023 வரை புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர் மற்றும் பொன்னமராவதி ஆகிய வட்டங்களில் முகாம் நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக (Phase-II)  5.8.2023 முதல் 16.8.2023 வரை திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார் கோவில் ஆகிய வட்டங்களில் முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு கட்டமாக நடைபெற்ற முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.

 இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.04322-295022, வாட்ஸ்அப் எண் – 94450 45622.

மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அப்போது விண்ணப்பதாரர்கள் கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top