Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

புதுக்கோட்டை பிருந்தாவனம் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் 10 -ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டைபிருந்தாவனம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 10ஆம் ஆண்டு வருஷாபிஷேகவிழா

புதுக்கோட்டை  இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த பிருந்தாவனம வடக்கு ராஜ  வீதியில்  அமைந்துள்ள  ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 10 -ஆம் ஆண்டு  வருஷாபிஷேக விழா   சிறப்பு  வழிபாடு நடைபெற்றது.

கோவிலில் மூலவர்  ஸ்ரீ வீர  ஆஞ்சநேயர் சுவாமிக்கு,   பாலபி ஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் வடை மாலை  அலங்காரத்திலும், மஹா தீபராதனை நடைபெற்றது..அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது .

மாலையில் ஸ்ரீ ஆஞ்சநேய ர்சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு   அருள் பாலித்தார். நிகழ்வில் திரளான பக்தர்கள்  வருகை தந்து ஸ்ரீ வீர  ஆஞ்சநேயர் சுவாமியை   வழிபட்டனர்.

இரவு  உற்சவர் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்ட தேரில்   பல்வேறு வீதி வழியாக பவனி வந்தது.வருஷாபிஷேக விழா ஏற்பாடுகளை,  நிர்வாகிகள்   செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top